ஓட்டேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்துசாம்பல்

சென்னை, ஓட்டேரி சச்சிதானந்தா தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

பகல் ஒரு மணியளவில், குடிசை வீடு ஒன்றில், சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ,அருகில் இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Exit mobile version