ஆஸ்கார் விருதில்.. தீபிகா படுகோன்.. என்ன சேதியா இருக்கும்?

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருதானது திரை உலகில் சிறந்து விளங்கி வரும் திரைப்பட கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டுவருகிறது. நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைப்படம், ஆடை வடிவமைப்பாளர், இசை, துணை நடிகர் எனப் பன்முக கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்கார் ரேசில் நம் இந்தியாவைச் சேர்ந்த திரைப்படமான RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மரகத மணி என்று அழைக்கப்படும் எம்.எம்.கீரவாணி ஆவார்.

இந்த ஆஸ்கார் விழாவானது வருகிற மார்ச் 12, ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற இருக்கிறது. இது 95வது ஆஸ்கார் விருது விழா ஆகும். இந்த விருதுவிழாவில் இந்திய நடிகை தீபிகா படுகோன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அவர் ஆஸ்கார் அமைப்பானது அவரை விருது வழங்குநராக அழைத்துள்ளது. இந்த செய்தியினை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து தீபிகா படுகோனிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவரும் தன்னுடைய படவரி(இன்ஸ்டாகிராம்) பக்கத்தில் இந்த செய்தியினை பகிர்ந்து, இது பெருமையளிப்பதாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version