255 திருநங்கைகளுக்கு வாடகை வீடுகளுக்கான ஆணை: துணை முதல்வர் வழங்கினார்

வாடகை வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை 255 திருநங்கைகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை ஒக்கியம் துரைபாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் 255 வாடகை வீடுகள் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று 255 திருநங்கைகளுக்கு வாடகை வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இதேபோல் திருநங்கை நலவாரிய உறுப்பினர் அட்டையையும் துணை முதலமைச்சர் வழங்கினார்.

Exit mobile version