மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடங்கிய குழு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பல ஆண்டுகளாக நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்பு முறையிடப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post