விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு — தீர்மானம் நிறைவேற்றம் !

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 கிராமங்களை நில எடுப்பு செய்து இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் ஏரிகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மேலும் கிராம மக்கள் ஒன்றுகூடி நிலத்தை தரமாட்டோம் என கூறி தொடர்ந்து 184 வது நாளாக இரவு நேர அறவழி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டு போராட்டத்திற்கும் தீர்மானத்திற்க்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version