கர்நாடகவில் ஹெர்பஸ் வைரஸ் தாக்கியதில் யானை உயிரிழப்பு

கர்நாடகத்தின் சிவமோகாவில் உள்ள யானைகள் முகாமில் ஹெர்பஸ் வைரஸ் தாக்கி யானை ஒன்று இறந்ததால் பத்து யானைகளை முகாமுக்கு வெளியே வைத்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

சிவமோகா மாவட்டத்தில் உள்ள முகாமில் அண்மையில் நாகண்ணா என்கிற யானை இறந்தது. அந்த யானைக்கு உடற்கூறாய்வு செய்ததில் ஹெர்பஸ் வைரஸ் தாக்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முகாமில் மொத்தமுள்ள 24 யானைகளில் 10 யானைகளை முகாமுக்கு வெளியே கொண்டுவந்து சிகிச்சை அளித்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

Exit mobile version