மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள தொட்டகோம்பை சுரங்கபள்ளம் அருகே கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை தனியாக சுற்றி வந்தது. இந்த யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கோதண்ட ராமன் என்பவரது தோட்டத்தில் யானை ஒன்று தண்ணீர் அருந்துவதற்காக நுழைந்துள்ளது. அப்போது அங்கிருந்த மின்வேலியில் யானையின் தும்பிக்கை சிக்கிக்கொண்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த சென்ற வனத்துறையினர், நடத்திய விசாரணையில், கோதண்டராமன் தனது பம்பு செட் மின் இணைப்பிலிருந்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகி உள்ள கோதண்ட ராமனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version