சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை வேப்பேரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை வேப்பேரி ஆரியன் தெருவில் உள்ள தனியார் உணவு விடுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வட மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த வட மாநிலத்தை சேர்ந்த அக்சய், தீபக்குமார், சௌதாகர், முகேஷ் குமார் ஆகிய நான்கு பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் விடுதியை பூட்டும் போது சமையல் எரிவாயு சிலிண்டரை அணைக்காமல் சென்றதால், கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தடயவியல் துறையினரும் விபத்து குறித்து ஆய்வு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version