கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன – ஓ.பன்னீர்செல்வம்

அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாததால், கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தார். பின்னர், பேசிய அவர், தாங்கள் அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாததால் கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாகவும், கொடநாடு விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version