விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதியில்லை :முதலமைச்சர்

கருத்து கணிப்புகளைப் பொய்யாக்கி 40 மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கருத்துக் கணிப்புகள் கருத்து திணிப்புகளே என்று குறிப்பிட்டார்.

விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று ஏற்கனவே உறுதிபட தெரிவித்து இருப்பதை நினைவு கூர்ந்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வீணாக அரசியல் செய்வதாகவும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version