நெய், வெண்ணெய் இல்லை; ஆவினில் தொடரும் தட்டுப்பாடு..!

தமிழகத்தில் ஆவினில் பால் கொள்முதல் குறைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தவிர பல்வேறு மாவட்டங்களில் 1 கிலோ மற்றும் 100 கிராம் நெய் பாட்டில்கள் மட்டுமே கையிறுப்பில் உள்ளதாகவும், 200 மற்றும் 500 மி.லி. நெய் பாட்டில்கள் கிடைக்காமல், மக்கள் தவிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஆவினில் பால் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அது, 30 லட்சம் லிட்டர் வரை குறைந்துள்ளதாக பால் முகவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version