NLC, மத்திய, மாநில அரசுகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் பதில் அளிக்க உத்தரவு!

நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையத்தினால், அருகே உள்ள நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக NLC நிர்வாகம், மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் பதில் அளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

NLC யைச் சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை அடிப்படையில் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்தனர். பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் அமர்வு.

Exit mobile version