காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரிடம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. சாகுல் ஹமீது என்பவர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்துல் ரஷீத்திடம் இருந்து லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் உள்ளிட்வை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சதித்திட்டம் தீட்டுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அப்துல் ரஷீத், தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராக அப்துல் ரஷீத்துக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், என்.ஐ.எ. அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Exit mobile version