ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு – தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இருவர் கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அப்துர் ரகுமானிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இராமநாதபுரத்தைச் சேர்ந்த அகமது அப்துல் காதர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த இர்பான் நசீர் ஆகியோருக்கு தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூரில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை பெங்களூர் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அனுமதி பெற்றுள்ளது.

Exit mobile version