தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் இரு தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் எனவும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக சேலம் மற்றும் திருத்தணியில் நேற்று 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானதாகவும் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version