தமிழகம், புதுவையில் வரும் 22ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், டிசம்பர் 22ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், தற்போது வெப்பச் சலனம் காரணமாக, வரும் 22ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, வேதாரண்யத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளாதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version