இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தின்போதும் அதைத் தொடர்ந்தும் இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 300 பேர் வரை பலியாகியுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நிகழ்ந்து 2 வாரங்கள் கடந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கையின் கத்தோலிக்க கார்டினலான மால்கோம் ரஞ்சித், இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால்,மறு அறிவிப்பு வரும்வரை தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க பள்ளிகளை மூடும்படி தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் இலங்கையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version