அப்ப அடுத்த திமுக தலைமை செந்தில்பாலாஜிதானோ? கரூர் உ.பிக்களின் அலும்பல்!

கரூர்ல உள்ள கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள்ல மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்துருக்கு. இந்த நிகழ்ச்சியில 100-க்கும் மேற்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து இருக்காங்க. முக்கியமா அமைச்சர் செந்தில்பாலாஜியும் கலந்துருக்காரு…… என்னது செந்தில்பாலாஜியா?….. அவர் ஜெயில்லல இருக்காருன்னு பதறுதா?…. ஆமா அவர் ஜெயில்லதான இருக்காரு…. அதுவும் இலாகா இல்லாத அமைச்சரா…. ஆனா இந்த சைக்கிள எல்லாம் வழங்குபவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜினு பேனர்லாம் கட்டியிருக்காங்க அந்த நிகழ்ச்சியில…. திமுக தலைமையே குற்றவாளியான செந்தில்பாலாஜிய இந்தத் தாங்கு தாங்குறதாலதான்…. இலாகாவே இல்லாதபோதும் இப்படியெல்லாம் பேனர வச்சி திமுககாரங்க கொண்டாடுறாங்க போல… போற போக்க பார்த்தா திமுகன்னா ஸ்டாலின் இல்ல… அது செந்தில்பாலாஜின்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ என்னவோன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

Exit mobile version