இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நீட் தேர்வு ஒழிப்புக் குறித்து ரகசியம் சொல்கிறேன் என்று மக்களை ஏமாற்றிய ஸ்டாலின் & கோ!

2 தடவை நீட் தேர்வு எழுதியும் என்னால டாக்டராக முடியல.. நான் இந்த உலகத்த
விட்டே போறேன்.

எத்தனையோ கனவுகளுடன் காத்திருந்த ஒரு டாக்டரை இந்த தமிழ்நாடு இழந்திருக்கிறது.. இல்லை இல்லை, இந்த அரசு கொன்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்… ஜெகதீஸ்வரனோடு இந்த சோகம் முடிந்துவிடவில்லை.. தன் குழந்தை இறந்த துக்கத்தை தாளாமல், கணத்த இதயத்துடன் இருந்த அவர் தந்தையும் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத குற்ற உணர்ச்சியோடு அவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்….

தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று நாம் வேண்டுமானால் க்ளாஸ் எடுக்கலாம்.. ஆனால், தலைவலியும் வயிற்றுவலியும் அவரவர்களுக்கு வந்தால்தானே தெரியும் என்ற சொலவடை போல, ஏக்கமும் துக்கமும் அவரவர்களின் வலிதானே…. அந்த வலியைக் கொடுத்த திமுக அரசின் மீதான தன் ஆதங்கத்தை தன் தற்கொலைக்கு முன்னால் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் இறந்துபோன அந்த தந்தை…

செல்லும் இடமெல்லாம், ஏறும் மேடைகளிளெல்லாம் ஆட்சிக்கு வந்தால் ரகசியம் வைத்திருக்கிறோம், ரசம் வைத்திருக்கிறோம் என்று வாயில் வடை சுட்ட அவியல் மன்னர்கள் உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட ஸ்டாலின் அண்டு கோ வினரை கிழித்து தொங்கவிடுகிறார்கள் தமிழ்நாட்டு மாணவர்கள்…

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் திராணியில்லாத இந்த விடியா அரசு என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது…

தங்கை அனிதாவுக்காக அரியலூர் சென்று போராடிய உதயநிதி, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு உயிரிழப்புகள் எதையுமே கண்டுகொள்ளவில்லை… ஆனால், அதிமுக என்ன செய்தது என்று வாய்கூசாமல் கேட்கிறார் வாரிசு அமைச்சர்.. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா? தமிழ்நாட்டில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது என்று ஏதாவது தெரியுமா இந்த விடியா அரசின் அங்கத்தினருக்கு?

மாதம் ஒரு நீட் இறப்பை அசால்ட்டாக கடந்துசெல்லும் இந்த விடியா அரசு, நாங்கள் ஆளுநரின் டீ பார்ட்டியை புறக்கணிக்கிறோம் என்று சால்ஜாப்பு காட்டிக்கொண்டிருக்கிறது… சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்? டீ பார்ட்டியை புறக்கணித்தால் நீட் ரத்தாகிவிடுமா? இதுதானா உங்க டக்கு என்று திமுகவை கழுவிக்கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள் திமுகவின் நாடகத்தை புரிந்து கொண்டவர்கள்…

ஆக, உதயநிதி தன் பாக்கெட்டில் வைத்திருப்பதாகச் சொன்ன நீட் ரத்து ரகசியம் என்ன? இத்தனை பேரை பலிவாங்கிய பிறகும்கூட அந்த ரகசியத்தை வெளியிடாததன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? உண்மையாலுமே திமுக ரகசியம் வைத்திருக்கிறதா அல்லது அது வெறும் காலிப்பெருங்காய டப்பாவா என்று எத்தனையோ முறை கழுவிக் கழுவி ஊற்றினாலும் கொஞ்சம் கூட காதில் வாங்கிக்கொள்ளாத திமுகவின் சாயம் ஒவ்வொரு நாளும் வெளுத்துக்கொண்டிருக்கிறது.

Exit mobile version