இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. சாதி ஆவணப் படுகொலைகளைத் தடுக்க முடியாமல் திணறுகிறதா ஸ்டாலின் அரசு?

சமூகநீதி நாடகம்போடும் ஸ்டாலின் ஆட்சியில் தொடர்ந்து நிகழும் சாதி ஆணவப் படுகொலை குறித்தும், சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க முடியாமல் திணறுகிறதா ஸ்டாலின் அரசு என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

இப்போ லாம் யாரு சார் சாதி பாக்குறா?….. என்ற கேள்வியை சமீப காலங்களாக விடியா திமுக ஆட்சியில் திமுகவின் உ.பிக்கள் உளறிக் கொண்டிருக்கும் வேளையில், கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து சாதி ஆணவப் படுகொலை சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பேர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தன்னைப் பெற்ற தாயையும், தான் பெற்ற மகனையுமே சாதிக்காக வெட்டி கொலை செய்திருக்கிறார் அன்புத்தந்தை ஒருவர்.. சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தின் கொடுமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருணகிரி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் தன்னுடன் திருப்பூரில் வேலை செய்த சிதம்பரத்தைச் சேர்ந்த பட்டியலினப் பெண் அனுஷுயாவை காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன் திருமணம் முடித்துள்ளார்.

ஆனால் இவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் சுபாஷின் தந்தை தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் ஊறிப் போய் இருந்த சாதி வெறியால் இளம் தம்பதியர் மீது கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனையும், தடுக்க வந்த தனது தாயையும் வெட்டிப் படுகொலை செய்ததுடன் மருமகளையும் கொலை செய்ய முயற்சிக்க, படுகாயங்களுடன் தப்பி இருக்கிறார் அந்த பெண்.

சாலையில் கிடந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து இருந்த நிலையில் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்து இருக்கின்றனர்.

விடியா திமுக ஆட்சியில் சாதி ஆணவக் கொலைகள் தாண்டவமாடுவது ஒன்றும் புதிதல்ல.. கடந்த மார்ச் மாதம் இதே கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. டேம் ரோட்டில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

2 மாதங்களுக்குள் சாதி ஆணவக் கொலைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். ஒரு உயிர் எப்போது வேண்டுமானாலும் போய்விடும் நிலையில் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன செய்யப்போகிறது சமூக நீதி பேசும் விடியா அரசு. கடந்த மாதம் கொலை நிகழ்ந்தபோதே கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்று சாதி ஆவணக் கொலை செய்யும் எண்ணத்தை அழித்திருக்க முடியும். ஆனால் இதனை செய்யத் தவறிவிட்டு உயிரிழந்த பின்னர் நிவாரண நிதி அளிப்பது மட்டும் சாதியை அழிக்குமா? தொடர்ந்து தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு ஆளும் விடியா திமுக அரசு என்ன செய்யப் போகிறது?

ஓட்டு போட்ட சாமானியருக்கு பாதுகாப்பில்லாத நிலையை கொடுத்து இருப்பது தான் ஸ்டாலினின் விடியலா?. காவல்துறையை தன் வசம் வைத்துள்ள ஸ்டாலின், சாதி ஆணவப் படுகொலைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுடியாமல் திணறுகிறாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Exit mobile version