ஆவின் பால் உப பொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம்

ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, ஒரு சில பால் உப பொருட்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அண்மையில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதன் எதிரொலியாக, பால் விற்பனை விலையும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பல ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பலன் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஆவின் பாலை கொண்டு உற்பத்தி செய்யப்படும், பால் பவுடர், பால் கோவா, நெய், பன்னீர், தயிர், வெண்ணை ஆகியவற்றுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை வரும் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

Exit mobile version