தமிழகத்தில் ரூ. 35.19 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 14 பாலங்கள் திறப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில், பவானியாற்றின் குறுக்கே 7 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை எல்லை சாலைத் திட்டத்துக்கான நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களின் பயன்பாட்டுக்கு 5 ஜீப்புகளை வழங்கும் வகையில் அதற்கான சாவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

Exit mobile version