பாகிஸ்தானைத் தோற்கடிக்கும் என்று இந்திய அணி நினைத்துக்கூட இல்லை: சோயப் அக்தர்

சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகும் வரை பாகிஸ்தானைத் தோற்கடிப்பதைப் பற்றி இந்திய அணி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கங்குலி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிலையில் இது பற்றிக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், கங்குலி கிரிக்கெட் வாரியத் தலைவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். 1990களில் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடிக்க முடியும் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை எனவும், சவுரவ் கங்குலி இந்திய அணியின் தலைவராக வந்தபின்னர் தான் இந்த நிலைமை மாறியதாகவும் சோயப் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version