நீட் ஆள்மாறாட்டம் :இ-சேவை மையத்தில் இருந்து தகவல்களை திரட்ட சிபிசிஐடி திட்டம்

நீட் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை, இ-சேவை மையத்தில் இருந்து பெற சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பலர் வெற்றி பெற்றது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் 2 மாணவிகள் மற்றும் 8 மாணவர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டனர். எனினும் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, முறைகேடு செய்தவர்கள் குறித்த விவரங்களை ஆதார் தகவல்களை சேகரிக்கும் இ-சேவை மையங்களில் இருந்து திரட்ட சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version