நீட் தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் 15 ஆம் தேதி வெளியாகலாம்!

 

நீட் தேர்வு முடிவுகள் வருகிற 15 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரக்கூடிய நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்பொழுது நடைபெறும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வருகிற 15ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த தேதியை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version