Rules மீறிய பாருக்கு சீல்! அதிகாரிகள் அதிரடி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விதிமுறையை மீறி மதுபானம் விற்பனை செய்த, தனியார் மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நத்தத்தில், கோவில்பட்டி – மதுரை சாலையில் தனியார் மதுபானக்கடை, பாருடன் செயல்பட்டு வந்தது. இங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற மாவட்ட அதிகாரிகள் உரிம நிபந்தனைகளை மீறி விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலால் துறை உதவி ஆணையாளர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நத்தம் வருவாய்த் துறையினர் முன்னிலையில் பாருக்கு சீல் வைத்தனர்.

Exit mobile version