பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நளினி, 51 நாட்கள் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டு, நளினி மனுத்தாக்கல் செய்திருந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கியது. ஆகஸ்ட் 25 ஆம் தேதியோடு ஒரு மாத பரோல் முடிந்த நிலையில், நளினி தரப்பில் மேலும் ஒரு மாத பரோல் கோரப்பட்டது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட 3 வார கால பரோல் ஞாயிறுடன் முடிந்ததால், நளினி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

Exit mobile version