நடிகர் சங்கத் தேர்தல்: வாக்கு எண்ணுவது குறித்து அக்.15ம் தேதி முடிவெடுக்கப்படும்

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும், தேர்தலை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோர் சார்பில் விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் அக்டோபர் 15 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என அறிவித்த நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version