அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்க OLX-ல் விளம்பரம் செய்த மர்ம நபர்

சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்க, விளம்பரம் செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டில், முகமது காசிம் என்பவர் 50 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பலர், காசிம் வீட்டிற்கு வந்து வீட்டை விலை பேசியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது சாதிக் பாட்ஷா என்ற பெயரில் இந்து சமய  அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்பனைக்கு என மர்ம நபர் ஒருவர் ஓஎல்எக்ஸ்.இல் விளம்பரம் செய்தது தெரியவந்தது. இந்த தகவலை முகமது காசிம் இந்து அறநிலையத்துறைக்கு தெரிவித்துள்ளார். இதன் பிறகு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஓஎல்எக்ஸ்.இல் விளம்பரம் கொடுத்த நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version