சென்னையில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை அம்பத்தூரில் உறவினரை கிண்டல் செய்ததை தட்டிகேட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அம்பத்தூர் அடுத்த ஒரகடம், பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன். இவரது உறவினரை கடந்த 2013ம் ஆண்டு சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட நிரஞ்சனை, 4 பேர் கொண்ட கும்பல், அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அம்பத்தூரைச் சேர்ந்த வினோபா, ராஜரத்தினம், தாஜ், புஜ்ஜி ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version