மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

திருப்பூரில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு ஒரு பெண், இரண்டு மகன்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியத்தின் மனைவி இறந்துவிட்ட நிலையில், 2014-ம் ஆண்டு தனது பெண் குழந்தைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியத்திற்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Exit mobile version