16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை

திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாப்பன் நகரை சேர்ந்த பூபதி ராஜா என்பவர், சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி, திண்டுக்கல் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் பூபதிராஜாவை கைது செய்து, சிறுமியை மீட்டனர். மேலும், பூபதி ராஜா மீது ஆள் கடத்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த திருப்பூர் மகிளா நீதிமன்றம் பூபதி ராஜாவிற்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.

Exit mobile version