கடை முன் கம்பை நட எதிர்ப்பு தெரிவித்த பெண்! சரமாரியாக பெண்ணைத் தாக்கிய நபர்!

mumbai kamathipura

மும்பையில் தனது கடையின் முன் விளம்பரம் ஏந்திய கம்பை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை, ஒருவர் அடித்து பலமுறை தரையில் தள்ளிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

காமாத்திபுரா பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் பிரகாஷ் தேவி என்ற அந்த பெண், தனது கடையின் முன் கம்பை நட வேண்டாம் என, அந்த நபரிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணை அடித்ததாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version