தோனி இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கட்டாயம் விளையாட வேண்டும்: மலிங்கா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ் தோனி, இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கட்டாயம் விளையாட வேண்டும் என இலங்கை அணி வீரர் மலிங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் கடைசி லீக் போட்டியானது இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்.எஸ் தோனி, இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கட்டாயம் விளையாட வேண்டும் என்றும் அவருக்குப் பதிலாக மாற்று சிறந்த பினிஷர் வீரர்களை தயார் செய்ய இந்தக் காலம் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறினார்.

தற்போது வரை அவர்தான் உலகின் சிறந்த பினிஷராக இருக்கிறார் என்றும் அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்றும் இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

Exit mobile version