ஓய்வுக்கு பிறகு டோனி பா.ஜ.க.வில் இணைவார்: சஞ்சய் பஸ்வான் ஆருடம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மகேந்திர சிங் டோனி அரசியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அவரது நண்பரும் பாஜகவை சேந்த முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சஞ்சய் பஸ்வான், தோனி தனது நீண்ட நாள் நண்பர் என்றும் அவரை பாஜகவில் சேர்ப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகவே ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தோனி பாஜகவில் இணைவார் என தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், எனினும் ஓய்வுக்கு பிறகே இது தொடர்பாக அவர் முடிவெடுக்க முடியும் என கூறியுள்ளார்.

தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version