MP சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தியதாக அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து சாலை மறியல், விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததை கண்டித்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் அதிமுக எம்.பி, சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி அனந்த் வெங்கடேஷ், 6 வழக்குள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையெனக் கூறி அவற்றை தள்ளுபடி செய்தார்.

Exit mobile version