சொல் புத்தியும் இல்லாத, சுய புத்தியும் இல்லாத முதலமைச்சர், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் – எம்.பி சி.வி.சண்முகம்!

சொல் புத்தியும் இல்லாத, சுய புத்தியும் இல்லாத முதலமைச்சர், தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியில் மயிலம் தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக, அதிமுக ஆட்சியில் 53 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதாகவும், அதனை, தற்போது திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டினார்.கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றே அமைச்சருக்கு தெரியவில்லை என்றும் தனது துறையை கவனிக்காமல், உதயநிதிக்கு போஸ்டரை மட்டுமே ஒட்டு வருவதாகவும் அதிமுக எம்.பி சி.வி சண்முகம் கடுமையாக சாடினார்.சொல் புத்தியும் இல்லாத சுய புத்தியும் இல்லாத முதலமைச்சர்தான், தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பதாக என அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version