எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பா.ஜ.க.விற்கு ஓட்டளிக்காதவர்களை பற்றி, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அவர்களது குறைகளையும் கேட்டு, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் பா.ஜ.க எம்.பி.க்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க, எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்கள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை, பா.ஜ.க, எம்.பி.க்களுக்கு உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு, இப்போதே தயாராகுமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதவர்களை பற்றி, எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், அவர்களது குறைகளையும் கேட்டு பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Exit mobile version