மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட, 50க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களை தடுக்கவும், இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் தனிப்படைகள் அமைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த சோதனையின்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார். மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். சென்னை மெரினா கடற்கரை, சர்வீஸ் சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாநகரம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

Exit mobile version