மாநில அளவிலான கராத்தே போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

கொடைக்கானலில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஜுனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Exit mobile version