வாரணாசி தொகுதியில் மோடி அபார வெற்றி..

நாடு முழுவதும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே 19-ந் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான இந்த தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் தங்கள் தேர்தல் கடமையை ஆற்றினர்.இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது.

தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் 5,71,154 வாக்குகள் பெற்று பிரதமர் மோடி வெற்றி பெற்றார்..தற்போது இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் உலக தலைவர்கள் பலரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version