பிரதமராக இருந்தாலும் கட்சித் தொண்டர்களில் ஒருவன்தான்: மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜக தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தான் பிரதமராக இருந்தாலும் எப்பொழுதும் கட்சித் தொண்டர்களில் ஒருவன்தான் என்றும் கூறிய அவர், கட்சித் தொண்டர்களின் வாழ்த்துக்களே தனக்கு முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தனக்கு எதிராக நாகரிகமான முறையில் பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version