தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், 14 மாவட்டங்களில் குறைவானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குறைவானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 50 மில்லி, மீட்டர் வரை மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்..

Exit mobile version