சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் தமிழக சுகாதாரத்துறை முனைப்பு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பரிசோதனை செய்து வரும் நோயாளிகளிடம் அமைச்சர் கலந்துரையாடினார். பின்னர் கொரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது, சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version