ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

சட்டபேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இதில் பங்கேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இதனை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களுக்கு சென்றார். அங்கு அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அவருடன் கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

Exit mobile version