காமராஜரை போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

குடிமராமத்து திட்டத்தை யாருமே குறை சொல்ல முடியாத திட்டம் என்0 றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜரை போல் செயல்படுவதாக மக்கள் பாராட்டுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசின் சிறந்த திட்டம் குடிமராமத்து திட்டம் என்றும், இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

குடிமராமத்து திட்டத்தை யாருமே குறை சொல்ல முடியாத திட்டம் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜரை போல் செயல்படுவதாக மக்கள் பாராட்டுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார்.

Exit mobile version