கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பொங்கல் பரிசுப் பொருள் வழங்கப்படுகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவடம் ஒண்டிபுதூர் பகுதியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version