ஒக்கி புயலில் மாயமான 18 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1.80 கோடி காசோலை – அமைச்சர் சம்பத் வழங்கினார்

ஒக்கி புயலால் காணாமல் போன 18 பேரின் குடும்பங்களுக்கு, 1 புள்ளி 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.

கடந்தாண்டு கடலில் மீன்பிடிக்க சென்று ஒக்கி புயலின் தாக்கத்தினால் காணாமல் போன, மீனவ குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில், முதற்கட்டமாக, 18 மீனவ குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வீதம்,1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, அமைச்சர் சம்பத் வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

Exit mobile version