ஆஜரானார் பொன்முடி! இனி அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்!

2006 -2011 ஆம் ஆண்டு கனிம வளத்துறை அமைச்சர் ஆக இருந்த தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதால் தமிழக அரசிற்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் விழுப்புரம் விக்கிரவாண்டில் உள்ள அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய ஒன்பது இடங்களில் 13 மணி நேரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியது மேலும் 70 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள நகைகளை மதிப்பீடு செய்வதற்காக நகை மதிப்பீட்டாளர்கள் வந்து ஆய்வு செய்தனர். இதற்கு இடையில் சோதனை நடந்து கொண்டு இருந்தபோதே அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை காலை விசாரணை முடிவடைந்து அமைச்சர் பொன் மொழியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்த நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் சைதாப்பேட்டை வீட்டிலிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்று தற்போது ஆஜர் ஆகியுள்ளனர்.

Exit mobile version