தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது – அமைச்சர் செல்லூர் ராஜூ

வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, வாக்காளர் சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகபூபாளையத்தின் 16ஆம் வார்டில் மட்டும் 300 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இடம் மாறி சென்றவர்கள் இருக்கும் தொகுதியில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Exit mobile version